செய்திகள் :

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

post image

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஈடுபாடுள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இத்துடன், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாக தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக வசித்த அப்துல் வாஹித் (வயது 69) என்ற நபரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த காவல் அதிகாரிகள் பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

அட்டாரி - வாகா எல்லை வழியாக அவரது தாயகத்துக்கு அனுப்பபட தயாரான சூழலில் அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசின் உத்தரவினால் 224 இந்தியர்கள் மற்றும் 139 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக தங்களது தாயகங்களுக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இற... மேலும் பார்க்க

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் கோரிக்கை

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்... மேலும் பார்க்க

புதிய உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி!

2025 ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 2025-26 ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!

பயணிகள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. மேலும் பார்க்க