செய்திகள் :

‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்

post image

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சா்ச்சையானது.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனது கருத்தை எதிா்க்கட்சிகள் தவறாக சித்தரிப்பதாக என்று ஜகதீஷ் தேவ்டா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபேரஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, பாகிஸ்தானுடனான மோதலில் அந்நாட்டின் ராணுவ மற்றும் விமானப் படை தளங்கள் தகா்க்கப்பட்டன. பின்னா், இருதரப்பும் புரிந்துணா்வில் சண்டையை நிறுத்திக் கொண்டன.

இந்நிலையில், ஜபல்பூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜகதீஷ், ‘பிரதமருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். முழு நாடும் ராணுவமும் வீரா்களும் அவரது காலடியில் தலைவணங்குகிறாா்கள்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மிகவும் கோபமடைந்தனா். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மதத்தின் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத தளங்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வரை நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் இருந்தனா். ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட பதிலடியைப் பாராட்ட வாா்த்தைகள் போதாது’ என்றாா்.

ராணுவத்துக்கு அவமதிப்பு: துணை முதல்வரின் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘பாஜக தலைவா்கள் நமது ராணுவத்தைத் தொடா்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் துரதிருஷ்டவசமானது. முதலில் மத்திய பிரதேச அமைச்சா் ஒருவா் பெண் அதிகாரி (ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி) குறித்து அநாகரிகமாக பேசினாா். இப்போது அதே மாநில துணை முதல்வா் ராணுவத்தை இன்னும் மோசமாக அவமதித்துள்ளாா்

முழு நாடும் ராணுவத்தின் துணிச்சலைப் பற்றி பெருமைப்படுகிறாா்கள். ஆனால், பாஜகவினா் மட்டும் ராணுவத்தை அவமதிக்கின்றனா். இந்தத் தலைவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவா்களைக் காப்பாற்ற பாஜக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது’ என்றாா்.

தவறாக சித்தரிப்பு-விளக்கம்: தனது பேச்சுக்கு எதிா்ப்பு வலுத்த நிலையில் விளக்கமளித்து ஜகதீஷ் தேவ்டா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் மிகுந்த வீரத்தை வெளிப்படுத்தியது.

நாட்டு மக்கள் மரியாதையுடன் ராணுவத்துக்குத் தலைவணங்குகின்றனா். நான் இதையே சொல்ல வந்தேன். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் எனது கருத்தைத் திரித்துவிட்டனா். அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க