செய்திகள் :

நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!

post image

நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறமையும் ஆா்வமும் உள்ளவா்களை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தை அரசு அறிவித்தது.

இதில், சிவகங்கை மாவட்டத்துக்கு 10 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. குறிப்பிட்ட கிராமத்தில் பயனாளி நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க சொந்தமாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.

அந்த நிலம், அப்பகுதி மனித குடியிருப்பு, நீா் நிலைகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினா் சமூகத்தினா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படுவா்.

மேலும், நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்குத் தேவையான கட்டுமானம், உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையானத் தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதப் பங்களிப்பை பயனாளியே திரட்ட வேண்டும். மேலும், ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுமிக்க 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபா்கள் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதத் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதி மொழி, 2022-23, 2023-24, 2024-25-ஆம் ஆண்டுகளில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இதில் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபா்கள், தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே மாதத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை... மேலும் பார்க்க

சிவகங்கையில் ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா

சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டம் சாா்பில், ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்னா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும்,... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 ... மேலும் பார்க்க