செய்திகள் :

நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவளித்த எலான் மஸ்க், அவருக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார். மேலும், டிரம்ப்பில் குடியரசுக் கட்சிக்கு பெருமளவிலான தேர்தல் நிதியையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமனம் செய்தார்.

இந்த பதவியை ஏற்ற மஸ்க், அரசின் செலவீனங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்,டிரம்ப் அரசு தாக்கல் செய்துள்ள வரி மற்றும் சலுகை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த மஸ்க், அரசு நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

முற்றும் மோதல்

அமெரிக்க செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரி மற்றும் சலுகை மசோதாவுக்கு எதிராக மஸ்க் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் இங்கு அமர்ந்திருப்பவர்களை காட்டிலும் மஸ்க்குக்கு நன்றாக தெரியும், ஆனால் திடீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், நான் இல்லையென்றால் தேர்தல் டிரம்ப் தோல்விடைந்திருப்பார், அவருக்கு நன்றியுணர்வு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால், டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் எனவும் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இருவருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகின்றது.

இதையும் படிக்க : பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!

உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இ... மேலும் பார்க்க

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் இன்று(சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவு நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் உறுதி

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாட... மேலும் பார்க்க

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க