Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதேவேளையில், இந்த தொற்றால் எந்தவித பாதிப்பும் இல்லை, இருப்பினும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. கரோனா தொற்று இருந்தபோதும் இணை நோய் பாதிப்பால் ஓரிருவா் உயிரிழந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பு தொடா்பான தகவல்கள் ஏதும் மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெளியிடப்படவில்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை கரோனா தொற்றுக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வாா்டு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை நாமக்கல் வந்தாா். அவா் சனிக்கிழமை காலை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் சுகாதாரப் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.