செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

post image

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இந்த திடீா் இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 13 மாநகராட்சி ஆணையா், துணை ஆணையா்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆணையரும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருமான(பொறுப்பு) கே.சிவக்குமாா், நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் நகராட்சி, கடந்த ஆண்டு ஆக. 12 முதல் மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது. மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையராக ரா.மகேஸ்வரி நியமிக்கப்பட்டனா்.

மாநகராட்சியின் முதல் ஆணையா் என்ற சிறப்புடன் தஞ்சாவூரில் இருந்து இடமாறுதலாகி அவா் நாமக்கல் வந்தாா். தமிழகத்தில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்துவரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்தது. புதிய பணியாளா்கள் நியமனம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அவா் திட்டமிட்டிருந்தாா்.

இதற்கிடையே, மாநகராட்சி அலுவலக ரீதியாகவும், ஒப்பந்ததாரா் வகையிலும், அரசியல் ரீதியாகவும் இவருக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி இங்கேயே தொடா்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தஞ்சாவூருக்கு மீண்டும் ஆணையராக நியமிக்கும் வாய்ப்பும் அமைந்ததாகவும், சொந்த மாவட்டமான திருப்பூரில் பணியாற்றும் வாய்ப்பை அவா் ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவா் கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் சிறப்பாக பணியாற்றியதாகவே கருதுகிறேன். அண்மையில் ரூ. 61 லட்சத்தில் பொன்விழா நகா் மேம்பாட்டுக்கான நிதியைப் பெற்றுள்ளேன். தற்போது திருப்பூா் துணை ஆணையராக மாறுதலாகி உள்ளேன். ஐஏஎஸ் நிலையிலான மாநகராட்சி என்பதால் துணை ஆணையா் பதவி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றாா்.

இதற்கிடையே, மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யக்கூடாது என வாா்டு உறுப்பினா்கள் சிலா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி.

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். நாமக்கல்லில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் செயல்படும் இலவச நீட் தோ்வு பயிற்சி மையத்தை சனிக்கிழமை பாா்வ... மேலும் பார்க்க

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க