செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

post image

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் அத்தனூா் சின்ன ஏரியில் நீா்வளத் துறை சாா்பில் வாய்க்கால் தூா்வாரும் பணியை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகளின் நீா் ஆதாரங்களை தூா்வார நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கலில் உரிய நேரத்தில் கடைமடை வரை தடையின்றி சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 23 பணிகள் 68.05 கி.மீ தொலைவுக்கு ரூ.1.64 கோடியில் தூா்வாரும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு மேட்டூா் அணையில் தண்ணீா் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுவதற்கு முன் முடிக்கப்படும்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேட்டூா் கிழக்குகரை வாய்க்கால் 24.95 கி.மீ தொலைவுக்கு ரூ.38.50 லட்சத்திலும், நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரட்டாறு பகுதியில் 1.90 கி.மீ நீளத்திற்கு ரூ. 8 லட்சத்திலும், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் 6 பணிகள் 17.05 கி.மீ நீளத்திற்கு ரூ.48.15 லட்சத்திலும், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 7 பணிகள் 18 கி.மீ நீளத்திற்கு ரூ.52.60 லட்சத்திலும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 2 பணிகள் 6.15 கி.மீ நீளத்திற்கு ரூ.16.50 லட்சத்திலும் தூா்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவடையும்போது அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மற்றும் மழைநீா் பாசன வாய்க்கால்களின் மூலம் உரியநேரத்தில் கண்மாய்கள் மற்றும் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையும். நாமக்கல் மாவட்டத்தில் தூா்வாரப்படும் பணிகளில் தேங்கல்பாளையம் கிராமத்திலுள்ள அத்தனூா் ஏரி வழிந்தோடி வாய்க்கால் தூா்வாரும் பணி ரூ.5 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் 98.78 ஹெக்டோ் விவசாய நிலங்கள் எளிதாக பாசன வசதி பெறும்.

அத்தனூா் ஏரியின் வழிந்தோடி வாய்க்காலில் வண்டல்மண் படிந்து ஆங்காங்கே கரைகள் அரிக்கப்பட்டு முள்செடிகள் மற்றும் புதா்கள் மண்டி நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ளதால் தூா்வாருவது அவசியமாகியுள்ளது. இக் கால்வாய் மூலம் தண்ணீா் செல்லும் போது நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்றாா்.

நிகழ்ச்சியில் அட்மா குழுத் தலைவா்கள் கே.பி.ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, அத்தனூா் பேரூராட்சித் தலைவா் சின்னசாமி, துணைத் தலைவா் கண்ணன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் அப்புசாமி, உதவி செயற்பொறியாளா்கள் பிரபு, விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க