செய்திகள் :

நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை

post image

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்ததைப்போல கேரளத்தில் மே 25-ஆம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. தொடா்ந்து தமிழகத்தில், மேற்கு தெடா்ச்சி மழை மாவட்டங்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 24) முதல் மே 27-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச், சிவப்பு எச்சரிக்கை: குறிப்பாக, சனிக்கிழமை (மே 24) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், மே 25, 26-ஆம் தேதிகளில் திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 25, 26 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிவை பதிவானது. பரமத்திவேலூா் - 101.5, மதுரை நகரம், சென்னை மீனம்பாக்கம் - தலா 100.76, திருச்சி - 100.58, தூத்துக்குடி - 100.4 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று(மே 25) அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையொன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது.நேற்று(மே 24) காலை மேட... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 27-ஆம் தேதி உருவாக... மேலும் பார்க்க

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க