நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளா்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சாா்ந்த விவசாயிகள் பங்கேற்று பிரச்னைகைளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.