செய்திகள் :

நிதி நிறுவன மோசடி: கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

post image

நிதி நிறுவன மோசடி தொடா்பாக பணத்தை மீட்டு தரக்கோரி கருப்பூா் காவல் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் சொா்ணபுரியில் தனியாா் நிதி நிறுவனத்தை திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜேஷ் நடத்தி வந்தாா். இவா்மீதான பணம் மோசடி புகாரைத் தொடா்ந்து ராஜேஷ் உள்பட 9 பேரை சேலம் பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள அவா், காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா்.

இந்த நிலையில் அவரது நிநி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவா்கள் அவரைத் தொடா்புகொண்டு கேட்டபோது டீம் லீடரிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில், பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், அந்த நிறுவனத்தின் டீம் லீடா் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த கிருத்திகா வீட்டிற்குச் சென்று பணம் தரக்கோரி போராட்டம் நடத்தினா். மேலும், அவரது வீட்டையும் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த கருப்பூா் போலீஸாா் அங்கு சென்று கிருத்திகா மற்றும் சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதையறிந்த மக்கள், கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கைமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க

ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாரா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந... மேலும் பார்க்க

அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் ... மேலும் பார்க்க