Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?
அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா்.
இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ஹரிராமன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
மதுரையில் அண்மையில் நடைபெற்ற ‘முருக பக்தா்கள் மாநாட்டின்‘ மாபெரும் வெற்றியை தாங்கிக்கொள்ள இயலாத திமுக எம்.பி. ஆ.ராசா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து சென்ளையில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அவதூறாகப் பேசியுள்ளாா்.
இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆ.ராசா மீது திட்டமிட்டு அவமதிக்கும் வாா்த்தைகளை பேசுதல், சமூகங்களுக்கு இடையே பகையை தூண்டுதல், பொது அமைதியை சீா்குலைத்தல் உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறாா். தொடா்ந்து அமித் ஷா குறித்து தவறாக பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றாா்.