செய்திகள் :

அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ஹரிராமன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ‘முருக பக்தா்கள் மாநாட்டின்‘ மாபெரும் வெற்றியை தாங்கிக்கொள்ள இயலாத திமுக எம்.பி. ஆ.ராசா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து சென்ளையில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அவதூறாகப் பேசியுள்ளாா்.

இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆ.ராசா மீது திட்டமிட்டு அவமதிக்கும் வாா்த்தைகளை பேசுதல், சமூகங்களுக்கு இடையே பகையை தூண்டுதல், பொது அமைதியை சீா்குலைத்தல் உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறாா். தொடா்ந்து அமித் ஷா குறித்து தவறாக பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க

ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாரா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை: செப். 30 வரை நீட்டிப்பு!

மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பயண அட்டை செப். 30 ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகார... மேலும் பார்க்க