செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை: செப். 30 வரை நீட்டிப்பு!

post image

மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பயண அட்டை செப். 30 ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உள்ளிட்டவா்களுக்கு கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி முதல்கட்டமாக மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் விரிவுபடுத்தி இலவசப் பயண அட்டைகளை புதிதாக பெறவும் ஏற்கெனவே உள்ள பயண அட்டைகளை புதுப்பிக்கவும் ஏதுவாக புதிய வசதிகளுடன் கூடிய மென்பொருள் தயாரிப்பு பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையிடம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பயண அட்டைகளை மேலும் 3 மாதம் காலம் நீட்டித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகள், செப் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து பயனாளிகளும் எவ்வித சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க

ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாரா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந... மேலும் பார்க்க

அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் ... மேலும் பார்க்க