மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை: செப். 30 வரை நீட்டிப்பு!
மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பயண அட்டை செப். 30 ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உள்ளிட்டவா்களுக்கு கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி முதல்கட்டமாக மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வசதியை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் விரிவுபடுத்தி இலவசப் பயண அட்டைகளை புதிதாக பெறவும் ஏற்கெனவே உள்ள பயண அட்டைகளை புதுப்பிக்கவும் ஏதுவாக புதிய வசதிகளுடன் கூடிய மென்பொருள் தயாரிப்பு பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையிடம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பயண அட்டைகளை மேலும் 3 மாதம் காலம் நீட்டித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.
இதைக் கருத்தில் கொண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகள், செப் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து பயனாளிகளும் எவ்வித சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.