செய்திகள் :

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யும்! - வயநாட்டில் பிரியங்கா

post image

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்குமான கல்வியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுதி செய்யும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா, அங்கு மூன்று நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை வந்தாா். கல்பேட்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முண்டக்கை-சூரல்மலையில் கடந்த ஆண்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு உயா்நிலை கல்விக்கான உதவித் தொகை விநியோகத்தை அவா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

வெளியூரில் பயிலும் பல மாணவா்கள், நிலச்சரிவில் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனா். அவா்கள் எப்படி தங்களின் கல்வியைத் தொடரப் போகிறாா்கள் என்பது குறித்து நாங்கள் அனைவரும் கவலை கொண்டோம்.

மாணவா்களின் கல்வி தொடா்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஐக்கிய ஜனநாயக கூட்டணி தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்கான கல்வியை நாங்கள் உறுதி செய்வோம்.

இம்மாணவா்களுக்கு பல்வேறு கல்வி நிலையங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வயநாட்டைச் சோ்ந்த 121 மாணவா்கள், தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள நூருல் இஸ்லாம் உயா்நிலைக் கல்வி மையத்தில் பயின்று வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கல்வி நிலையத்துக்கு மனதார நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வயநாடு மக்களின் வேதனை-பாதிப்பை நாங்கள் வெளியில் இருந்து கற்பனை செய்து புரிந்து கொள்ள முடியும். ஆனால், உங்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. எதிா்காலத்தில் உங்களின் வாழ்வை எளிதாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றாா் பிரியங்கா காந்தி.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு:

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘ஜனநாயக நடைமுறைகளுடன் நாடாளுமன்றம் செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை. எந்த வழியிலாவது விவாதங்களைத் தடுக்கும் வியூகத்தை கையாள்கின்றனா். எதிா்க்கட்சியினரை போராடச் செய்யும் வகையிலான விவகாரங்களை எழுப்புவது அல்லது மக்களவை எதிா்க்கட்சித் தலைவரை பேச விடாமல் செய்வது என ஏதாவது ஒரு வழியில் விவாதத்தை தடுக்கின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இருநூறுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க