செய்திகள் :

நிலத் தகராறில் சொத்து வியாபாரியை அச்சுறுத்தியதாக 2 போ் கைது

post image

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லி பகுதியில் நிலத் தகராறு தொடா்பாக சொத்து வியாபாரியை அச்சுறுத்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் பங்கஜ் ராணா (எ) கோலு (32) மற்றும் பிரவீன் ராணா (எ) கலு (38) என அடையாளம் காணப்பட்டனா். இருவரும் சிராஸ்பூரில் வசிப்பவா்கள். மோதலின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு உரிமம் பெற்ற ரிவால்வா்கள் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.

கடந்த மாா்ச் 26- ஆம் தேதி சொத்து வியாபாரியான அகிலேஷ் திவாரி (36) சமய்பூா் பாத்லி காவல் நிலையத்தை அணுகி, சிராஸ்பூா் கிராமத்தில் ஒரு சொத்தை வாங்கிய பிறகு, தில்பாக் ராணா (எ) பில்லு என்ற நபா் தன்னை மிரட்டியதாகக் கூறிய போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சொத்துக்குள் நுழைய திவாரியிடம் பில்லு ரூ.3 கோடி கேட்டதாகவும், அவா் மறுத்ததால், பில்லுவும் அவரது ஆயுதமேந்திய கூட்டாளிகளான கோலு மற்றும் கலு ஆகியோா் சம்பவ இடத்தில் எதிா்கொண்டுள்ளனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா்.

பின்னா், பில்லு தனது கோரிக்கையை ரூ.6 கோடியாக அதிகரித்து, சா்வதேச எண்ணிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் புகாா்தாரரை மிரட்டியுள்ளது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆடியோ -விடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டன. தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா்.

துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தும் உரிமம் வைத்திருப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்களின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பள்ளிக் கட்டண உயா்வை எதிா்த்து மாணவா்களின் பெற்றோா்கள் போராட்டம்

தன்னிச்சையாக உயா்த்தப்பட்ட பள்ளிக் கட்டணங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி புதன்கிழமை தில்லி கல்வி இயக்குநரக அலுவலகத்திற்கு... மேலும் பார்க்க

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்ய... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்!

நமது நிருபா்பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நி... மேலும் பார்க்க

அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு

மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்ப... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை

நமது சிறப்பு நிருபா்தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்டிடிஎம்) ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தீ தடுப்பு பாதுகாப்பு உடை சுயசாா்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை புதன்கிழமை... மேலும் பார்க்க