செய்திகள் :

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

post image

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், சீன விண்வெளி ஆய்வு அமைப்பான சிஎன்எஸ்ஏ-வுக்கும் ராஸ்காஸ்மாஸுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.

நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் (ஐஎல்ஆா்எஸ்) அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் இந்த அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சா்வதேச நிலவு ஆய்வு நிலைய திட்டத்தில் வெனிசூலா, அஜா்பைஜான், தென் ஆப்பிரிக்கா, எகிப்து, நிகராகுவா, தாய்லாந்து, சொ்பியா, பாகிஸ்தான், செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளும் பங்கேற்கும் என்று கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

...படவரி...

(வரைகலை ஓய்வியம்)

திபெத், ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

திபெத், ஆப்கனில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. திபெத்தில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தம்? டிரம்ப் மத்தியஸ்தம்!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், 1,179-வது நாளாக நீடித்த... மேலும் பார்க்க

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள். உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித... மேலும் பார்க்க