செய்திகள் :

‘நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்’: குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

post image

ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான தீர்வுக் காண வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைக்கேடு இருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.3 அன்று கொல்கத்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு ஷிக்‌ஷாக் ஷிக்‌ஷா அதிகார் மன்சாவின் பிரதிநிதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் முறையிட்டதாக குறிப்பிட்டு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கொல்கத்தா நீதிமன்றம் அந்த தேர்வாணையை முழுவதுமாக ரத்து செய்தது. மேலும், இந்தத் தீர்ப்பை கடந்த ஏப்.3 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

இந்த இரண்டு தீர்ப்புகளும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்தும் சில ஆசிரியர்கள் முறைகேடு செய்யாமலும் பணியில் சேர்ந்துள்ளதை உறுதிச் செய்திருந்தாலும் இருதரப்பினரும் தங்களது வேலையைத் தற்போது இழந்துள்ளனர். ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் நடைபெற்ற குற்றம் கண்டிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முறைகேடுகளில் ஈடுபடாத ஆசிரியர்களும் தண்டனை அனுபவிப்பது நியாமன்று.

மேலும், முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகக் கூடும். அந்த ஆசிரியர்களின் மன உறுதியும் ஊக்கமும் அழிக்கப்படுவதுடன் போதிய வருமானம் இன்றி அவர்களின் குடும்பங்களும் அவதிக்குள்ளாவார்கள்.

முன்னதாக, நீங்களே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான்; எனவே, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படப்போகும் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை நீங்கள் நன்கு உணர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே, நீங்கள் இதில் தலையிட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர அரசு அனுமதிக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க