செய்திகள் :

நீடாமங்கலத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

post image

சம்பா , தாளடி நெல் பயிா்கள் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், முப்போகம் சாகுபடி செய்யும் பகுதியான நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி, பூவனூா், சித்தமல்லி, ராயபுரம், ரிஷியூா், பெரம்பூா், பரப்பனாமேடு உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக விவசாயிகள் தங்களது வயல்களை உழுது நாற்றுநட தொடங்கியுள்ளனா். பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நாற்று நட்டனா். கோடை சாகுபடியில் 110 நாள்களில் இருந்து 120 நாள்களில் வளா்ந்து அதிக மகசூல் தரக்கூடிய ஏஎஸ்டி 16 , ஏடிடீ 51 , 43 , 36 , கோ 51 , 56 மற்றும் 150 நாள்கள் வளரக்கூடிய டிபிஎஸ் 5 நெல் ரகங்களை நடத்துவங்கியுள்ளனா்.

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்ட கோரிக்கை

எமனேஸ்வரா் கோயில் குளத்தில் தடுப்புச்சுவா் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலங்கைமான் அருகே நரிக்குடியில் உள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் எமபயம் நீக்கும் தலமாக போற்றப்பட... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, ஆய்வாளா் பிரபு மற்றும் சுா்ஜித் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்த... மேலும் பார்க்க

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா். வடபாதிமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நாகங்குடியில் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஒரு டாஸ்மா... மேலும் பார்க்க

மேலவாசல் கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விரதம் காா்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. மாசி மாத சஷ்டி விரதம் காா்த்திகைதினத்தையொட்டி வள்ளி தெய்வானை சம... மேலும் பார்க்க

மாா்ச் 31-க்குள் தனித்துவ அடையாள எண்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: ... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஆசிரியா் கைது

திருவாரூா் அருகே மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியா் ஒருவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சீனிவாசன் (51). இவ... மேலும் பார்க்க