செய்திகள் :

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமுனாம்பாள். இவர் நீடாமங்கலம் அரண்மனையில் தங்கி வசித்து வந்தார். அப்போது இந்த பகுதி மக்களை தெய்வம் போல் காத்துவந்தார். இதனாலேயே அவர் நிறைமாத கர்ப்பிணியாக ஐக்கியமான யமுனாம்பாள் தோட்டத்தில் அவருக்கு கோயில் எழுப்பி நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆகவும், திருமணமாகாத பெண்கள் திருமணம் நடைபெறவும் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாள்களிலும் சிறப்பு பூஜைகள் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளிக்கிழமையன்று யமுனாம்பாள் கோயில் திருவிழா அதிவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த திருநாளில் சாதி, மதங்களைக் கடந்து வேறுபாடின்றி அனைவரும் யமுனாம்பாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முதல்வர் கூட்டம் முடியும் வரை காத்திருந்த மக்கள்: எதற்காக?

பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள்.

சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் ராஜகணபதி சன்னதியிலிருந்து பால்குடம் எடுத்து நகர முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகளும், கஞ்சிவார்த்தலும் அதனைத்தொடர்ந்து விசேஷசந்தனகாப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

காலை தொடங்கி இரவு வரை 10 ஆயிரம் பேர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

கும்பகோணம் வர்த்தகர் சங்கத்தலைவர் கணேசன் 516 பெண்களுக்கு வளையல், ஜாக்கெட்பிட் அடங்கிய பிரசாத பைகளை வழங்கினார்.

முன்னாள் வர்த்தகர் சங்கத்தலைவர் இளங்கோவன் மற்றும் சந்தானராமசுவாமி கைங்கர்ய சபாவினர் சேவைப்பணியாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் சத்திரம் மேலாளர் மற்றும் நகரவாசிகள், கிராமவாசிகள் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நீடாமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நெல்லை மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

நெல்லை வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான்... மேலும் பார்க்க

எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திரு... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து: அமைச்சர்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடு... மேலும் பார்க்க

முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் கூட்டம்: எதற்காக?

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்ட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத... மேலும் பார்க்க

மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: ஆளுநர் தரப்பு வாதம்

அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ந... மேலும் பார்க்க