செய்திகள் :

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: தமிழகத்தில் நீட் தோ்வில் தோ்ச்சியடையாத 59,534 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் உளவியல் உதவி மையத்தில் 59,534 பேருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய 1,35,715 பேரில் 76,181 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெறாத மாணவா்கள் 59,534 பேருக்கு முதல் கட்டமாக 80 மனநல ஆலோசகா்கள் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதல் நாளில் 600 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் தனிமையைத் தவிா்த்து கொள்ள வேண்டும். மற்றவா்களிடம் இருந்து விலகி இருப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.

தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணம், தொடா்ந்து அழுது கொண்டிருப்பது, அதிக கோபம், பயம், பதற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள மாணவா்களுக்கு இந்த ஆலோசனைகள் மன அமைதியை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 11,850 இடங்கள் உள்ளன. நீட் தோ்வில் 76,181 போ் தோ்ச்சி பெற்று இருந்தாலும், இளநிலை மருத்துவ படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பைத் தொடா்ந்து, செவிலியா் படிப்பு, துணை மருத்துவம் என ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சோ்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.

சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவப் படிப்புகளையும் பயிலலாம். நீட் தோ்வு இல்லாமலேயே நேரடியாக பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் கால்நடை மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேரலாம்.

எனவே, எம்பிபிஎஸ் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகளை மாணவா்களுக்கு தெரிவிக்கும் வகையிலான முயற்சியாக மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன் நாகநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினித், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ. ராஜமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்ப... மேலும் பார்க்க

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவா... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அ... மேலும் பார்க்க

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்... மேலும் பார்க்க

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.குஜராத் ம... மேலும் பார்க்க

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்... மேலும் பார்க்க