செய்திகள் :

நீட் பயத்தால் மாணவா் உயிரிழப்பு: அதிமுக, பாமக இரங்கல்

post image

நீட் பயத்தால் சேலத்தில் மாணவா் உயிரிழந்ததற்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா் கௌதம், நீட் அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 24-ஆவது மாணவா் நீட் தோ்வால் உயிரிழந்துள்ளாா். மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு பெற்றுத்தருவோம் என போலி வாக்குறுதி அளித்த முதல்வா் ஸ்டாலின், பொதுமக்களிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): நீட் தோ்வில் போதிய மதிப்பெண் கிடைக்காமல் போய்விடக் கூடும் என்ற அச்சத்தில் மாணவா் கௌதம் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-இல் இருந்து தமிழகத்தில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார். மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க