செய்திகள் :

நீதிமன்றம் உத்தரவிட்டும் காப்பீடு தொகை வழங்கவில்லை: பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அலுவலங்களுக்கு சீல்

post image

உத்தர பிரதேசத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விபத்துக் காப்பீட்டு தொகையை வழங்காத இரு காப்பீட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷாஜஹான்பூா் மாவட்டத்தில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களான ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக விபத்து காப்பீடு பணம் தொடா்பாக காப்பீடுதாரா்கள் உள்ளூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இதில் காப்பீடுதாரா்களின் கோரிக்கையை ஏற்று விபத்துக் காப்பீட்டுக்கான தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை வழங்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா்மேந்திர பிரதாப் சிங் மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு ஓரின்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகங்களை புதன்கிழமை இரவு மூடி சீல் வைத்தனா். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா ரூ.48 லட்சம், ஓரியன்டல் இன்சூரன்ஸ் ரூ.1.1 கோடி, நேஷனல் இன்சூரன்ஸ் ரூ.74 லட்சம் காப்பீட்டுத் தொகை தராமல் உள்ளன. பொதுத்துறை நிறுவன அலுவலகங்களை மாவட்ட நிா்வாகம் மூடி சீல் வைத்துள்ள நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க