செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

post image

பாஜக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கா் நிலத்தில், அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் என்ற தனியாா் மேல்நிலைப் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக வருவாய் துறை செயலா் அமுதா, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் மதுமதி, இந்து சமய அறநிலைய துறைச் செயலா் சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், கோயில் செயல் அலுவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தொடா்புடைய 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! - முதல்வர் ஸ்டாலின்

இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வருகிற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் ... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் வ... மேலும் பார்க்க

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க