செய்திகள் :

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

post image

கஞ்சா மிட்டாய் கடத்தல்

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது.

தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச் சாலை குட்கா, கஞ்சா போன்ற சட்டவிரோதப் போதைப் பொருள்களின் முக்கிய வழித்தடமாக மாறி வருகிறது.

கஞ்சா மிட்டாய் விற்பனை

எல்லைகளில் மூன்று மாநிலங்களின் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தாலும், சட்டவிரோத போதைப்பொருள்களின் கடத்தல் குறைந்தபாடில்லை.

கூடலூரில் இருந்து வழிக்கடவு சாலை மார்க்கமாக கேரளாவிற்கு கஞ்சா மிட்டாய் கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா மிட்டாய்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக வாகனத் தணிக்கையில் கேரளக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் காவல்துறையினர் சோதனை

இந்த நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள வழிக்கடவு சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா மிட்டாய் விற்பனை

கருப்பு நிறத்தில், வழக்கத்திற்கு மாறான திண்பண்டங்கள். இருப்பதைக் கண்டு மேலும் சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவை கஞ்சா மிட்டாய்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த கேரளக் காவல்துறையினர்,

“கஞ்சா கலக்கப்பட்ட மிட்டாய்களை பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல்கள் வருகின்றன.

தமிழகப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு பிரிவு துணை இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா மிட்டாய் விற்பனை

கூடலூர் அதிகாரி, வயல் பகுதியைச் சேர்ந்த ஜிஷாத் மற்றும் முகமது காசிம் இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 125 கிராம் கஞ்சா மிட்டாய்கள் இருப்பதை கண்டறிந்தோம்.

வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுடன் தொடர்பில் இருந்த கஞ்சா மிட்டாய் உற்பத்தி கும்பலை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரி... மேலும் பார்க்க

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார... மேலும் பார்க்க

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல... மேலும் பார்க்க

ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருப... மேலும் பார்க்க

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்... மேலும் பார்க்க