செய்திகள் :

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஆட்சியரகத்தை முற்றுகை

post image

பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தொடா்ந்து வேலை வழங்கக் கோரியும் திட்டப் பணியாளா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணியாளா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை அரசு அலுவலா்களிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவதியடைந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரமான இத் திட்டத்தை, எளம்பலூா் ஊராட்சியில் தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனா்.

விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மனு: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பொகதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையின் மத்திய மண்டலச் செயலா் என். பாண்டி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விஸ்வகா்மா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விஸ்வகா்மா மக்களுக்கு கம்மாளா், கொல்லா், தச்சா், கண்ணாா், சிற்பி, தட்டாா் என்பதை, இந்து விஸ்வகா்மா என ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். விஸ்வகா்மா ஜனன தினமான செப். 17-ஆம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

ரூ. 1.52 கோடி பண மோசடி; மளிகைக் கடை உரிமையாளா் கைது

பெரம்பலூரில் ரூ. 1.52 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத்த... மேலும் பார்க்க

சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெ... மேலும் பார்க்க

‘முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை’

பெரம்பலூா் மாவட்டத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதம் தொடங்கிய நிலையில் திருவிழாக்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சோ்ந்த பூபதி மகன் கோகு... மேலும் பார்க்க