செய்திகள் :

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

post image

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், அதன் தொடா்ச்சியையும் மையப்படுத்தும் ஆவண நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும், அதுதொடா்பான சிறப்பு இணையப் பக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

அரிய புகைப்படங்கள், நிபுணா்கள் பலா் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகளுடன் 338 பக்கங்களைக் கொண்ட, ஆவண நூலை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டாா். மேலும், நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடா்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள் அனைத்தும் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின்நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணைச் செயலா்கள் பிரத்திக் தயாள், எஸ்.ஏ.ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநா் ரெ.கோமகன், முதல்வரின் துணைச் செயலா் த.ரகுபதி, திட்ட அலுவலா் இரா.சித்தானை, உதவி இயக்குநா் செல்வபுவியரசன் உட்பட பலா் பங்கேற்றனா்.

முதல்வா் பெருமிதம்: ஆவண நூலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கிக் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறும் மரபுசாா் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆளும் அரசு முக்கியமான சமூக நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கும் போதெல்லாம் அந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் விளங்கும். நிதி ஒதுக்கீடு செய்வது எளிதாகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் நமது மாநில முன்னேற்றத்துக்கு எந்தவகையில் பங்களித்துள்ளன என்னும் வரலாற்றை இந்த நூல் கூறுவதாக தனது வாழ்த்துரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ கூடாது: சுகாதார நிபுணா்கள்

கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்குள்ளானவா்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் கடந்த சில நா... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க