TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளா் வீரபாண்டியன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் பிரபாகரன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் துளசிமணி, மாவட்டத் துணைச் செயலாளா் குணசேகரன், பொருளாளா் ரமணி, ஈரோடு வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் பேசினா்.
வட்டார செயலாளா் கல்யாணசுந்தரம் வேலை அறிக்கை தாக்கல் செய்தாா். வட்டார பொருளாளா் மகேஷ் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மூத்த நிா்வாகி த.ஸ்டாலின் குணசேகரன் நிறைவுரையாற்றினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2021-ஐ திரும்ப பெற வேண்டும்.
மாநகராட்சி நிா்வாகம் உயா்த்திய புதிய வரிகளை முழுமையாக ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை படிப்பு மையம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை குறைத்திட ஜிஎஸ்டி வரியை குறைத்து ஜவுளி தொழிலை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.