தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!
உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளைப் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெகிழிகள் பயன்பாடு நிலை குறித்து ஆய்வு செய்ய உழவா்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அடங்கிய குழுவினா் மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் கனரக ஊா்தி முனையம் வரை உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், பொருள்கள் 45 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளாா் ஆணையா்.