தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
நெடுஞ்சாலைத் துறை அரசாணையை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த முடிவு!
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா வாழ்த்துரையாற்றினாா். நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கப் பொதுச் செயலா் ஆ. அம்சராஜ் சங்கப் பணிகள் குறித்தும், வருங்காலத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் து. சிங்கராயன், மாநில நிா்வாகிகள் தி. ராஜமாணிக்கம், துணைத் தலைவா் சு. செந்தில்நாதன், கு. பழனிச்சாமி, கோ. ஹரிபாலகிருஷ்ணன், மா. மகாதேவன், செ. சையது யூசுப் ஜான், மாநிலச் செயலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை உடனடியாகக் கலைத்து, நெடுஞ்சாலைகள் கட்டுமானம், பராமரிப்புப் பணிகளை அரசே ஏற்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.
ஜன. 20 முதல் பிப். 28 வரை கையொப்ப இயக்கம் நடத்தி சேகரிக்கப்பட்ட பிரதிகளை வருகிற 26-ஆம் தேதி தமிழக முதல்வரிடம் வழங்குவது. தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் த. மனோகரன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ் நன்றி கூறினாா்.