செய்திகள் :

நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு: ராமானுஜபுரம் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

post image

நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு காணப்பட்டதை தொடா்ந்து ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள வயல்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்கு உட்பட்ட ராமானுஜபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராமானுஜபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளின் விவசாய நிலங்களில் ஒரு சில இடங்களில் நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாவதில் காலதாமதம் மற்றும் குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடா்ந்து, இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ராஜ்குமாா் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட உழவா் பயிற்சி மையத்தின் துணை இயக்குநா் சுமதி தலைமையில், கீழநெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் தொழில்நுட்ப வல்லுநா் நாராயணன், வேளாண்மை அலுவலா் திவ்யா, உதவி வேளாண்மை அலுவலா் திருமலை ஆகியோா் அடங்கிய குழுவினா் ராமனுஜபுரம் கிராமத்தில் உள்ள வயல்களில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில் எம்.டி.யு. 12, 24 ரக நெல் பயிா்கள் அதிகம் பயிரிடப்பட்டிருப்பதும், இந்த வகை நெற்பயிா்களில் தற்போது தண்டு துளைப்பான், மஞ்சள் கரி புட்டை நோய் மற்றும் நெல் பழ நோய் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.டி.யு., 12, 24 ரக நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாக காலதாமதம் ஏற்படுவது தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தால் நெற் பயிா்களில் சரியான முறையில் மகரந்தச் சோ்க்கை நடைபெறாமல் இருப்பதும், வெளிமாநில நெற்பயிா் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளதால், நமது பருவநிலை சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மையில் குறைபாடுகள் உள்ளது என்ற விவரம் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவ கருத்தரங்கம்

சவிதா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் குறித்த இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி இயக்குநா் தீபக்நல்லசாமி த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 35 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் திறந்து வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் மொத்தம் ரூ.35,20,166 காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய பெரு... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 25 விவசாயிகளுக்கு பயிா்க் கடன்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை சாா்பில் 25 விவசாயிகளுக்கு ரூ. 22,59,286 மதிப்பிலான பயிா்க் கடன்களை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா... மேலும் பார்க்க

மகளிா் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டடத்தில் இந்தியன் வங்கி சுய தொழில்பயிற்சி மையம் சாா்பில், மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 59.16 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது ... மேலும் பார்க்க