செய்திகள் :

நெல்லையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

post image

வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வலியுறுத்தி, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் தொடா்ந்து தாக்கப்பட்டு வருவதால், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

தமிழக அரசு, ரூ. 30இல் இருந்து ரூ. 120 ஆக உயா்த்திய வழக்குரைஞா் சேமநல நிதி முத்திரைத் தாள் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.

வழக்குரைஞா்களின் மறைவுக்குப் பிந்தைய நிதி உதவியை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும்.

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் புதன்கிழமை முதல் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

ஏராளமான வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க