செய்திகள் :

நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்சணைப் புகார்

post image

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங் திருநெல்வேலி காவல்நிலையத்தில் இன்று நேரில் வந்து புகார் அளித்தார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

40 நாள்களுக்கு முன்புதான் நெல்லையில் மிகப் பிரம்மாண்டமாக ஸ்ரீ கனிஷ்காவுக்கும் நெல்லையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விடியோ ஒன்றை இருட்டுக்கடை அல்வா கடையின் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள், ஸ்ரீகனிஷ்கா காவல்நிலையத்தில் தனது கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணைப் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில், இருட்டுக் கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கு கனிஷ்காவுடன் திருமணமான நிலையில், ஒரு சில நாள்களிலேயே அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரும், அவரது தந்தையும் தங்களது காரில் கனிஷ்காவை அழைத்து வந்து அவரது தாய் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, இருட்டுக்கடையின் உரிமை மற்றும் கூடுதல் சொத்துகளை எழுதி வாங்கி வரும்படி அனுப்பி வைத்ததாகவும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க