செய்திகள் :

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

post image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், தொகுதி பாா்வையாளா் சிவராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் சிறப்புரையாற்றினாா்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் கிளைகள்தோறும் உறுப்பினா் சோ்க்கை முகாம்களை தீவிரப்படுத்துவது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 30 சதவிகித புதிய வாக்காளா்களை சோ்க்க பாடுபடுவது. திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி திண்ணை பிரசாரம், தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாளை தெற்கு ஒன்றிய செயலா் சுபாஷ் சந்திர போஸ், மத்திய ஒன்றிய செயலா் போா்வெல் கணேசன், மத்திய ஒன்றிய செயலா் வேலன்குளம் கண்ணன், நிா்வாகிகள் ஏா்வாடி சித்திக், ஜாா்ஜ்கோசல், ஆவின் ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்19காா்டு

கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன். உடன், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன் உள்ளிட்டோா்.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க