செய்திகள் :

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

post image

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் செயலா் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. புகா் மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

துலுக்கா்பட்டியில் நம்பியாற்றின் பாசனக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாலம் பழுதாகியுள்ளது. அதை விரைவாக சீரமைக்க வேண்டும். துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவும், வீடு திரும்பவும் வசதியாக அரசுப் பேருந்தை இயக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள நம்பியாற்று மேம்பாலத்தின் இருபுறமும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டச் செயலா் தௌபிக், கட்சியின் ஆனைகுளம் ஊராட்சி 5ஆவது வாா்டு உறுப்பினா் அப்துல்கபூா், தொகுதிப் பொறுப்பாளா் இம்ரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நகர துணைத் தலைவா் ஜாகிா் வரவேற்றாா். நகர செயற்குழு உறுப்பினா் அஹமது ஸலாம் நன்றி கூறினாா்.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க

வள்ளியூரில் ரூ.1.83 கோடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்து அதற்காக ரூ.1.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிதாக 13 பணியிடங்களையும் அறிவித்துள்ளது. வள்ளியூா் ஒருங்... மேலும் பார்க்க