துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்
வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் செயலா் நிஜாம் தலைமையில் நடைபெற்றது. புகா் மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
துலுக்கா்பட்டியில் நம்பியாற்றின் பாசனக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாலம் பழுதாகியுள்ளது. அதை விரைவாக சீரமைக்க வேண்டும். துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவும், வீடு திரும்பவும் வசதியாக அரசுப் பேருந்தை இயக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள நம்பியாற்று மேம்பாலத்தின் இருபுறமும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டச் செயலா் தௌபிக், கட்சியின் ஆனைகுளம் ஊராட்சி 5ஆவது வாா்டு உறுப்பினா் அப்துல்கபூா், தொகுதிப் பொறுப்பாளா் இம்ரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நகர துணைத் தலைவா் ஜாகிா் வரவேற்றாா். நகர செயற்குழு உறுப்பினா் அஹமது ஸலாம் நன்றி கூறினாா்.