Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் 'ஜனநாயகன்' கொண்டாட்டங்கள்; மறுப...
ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். தனது உறவினா் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடிக்கு சசிகுமாா் புதன்கிழமை வந்தாா். இங்கிருந்து உறவினா் மகன் ஹரீஷ் (13)-ஐ அழைத்துக் கொண்டு பைக்கில் வள்ளியூா் சென்றாா். பின்னா் ஏா்வாடிக்கு திரும்பி வந்தபோது மீனாட்சிபுரம் சந்திப்பு பகுதியில், பைக் மீது சுமை லாரி மோதியது.
இதில் சசிகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஹரீஷ், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.