செய்திகள் :

நெல்லை: ``பிரிவினை, வன்முறையை தூண்டும் வலைதள பதிவுகளை போட்டால்..'' - எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர்

post image

நெல்லையில் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக பிரிவினையைத் தூண்டி, பொதுமக்களிடையே தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நபர்களை போலீஸார் கண்டுபிடித்து களை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பயங்கர ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரச்னைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் மட்டுமின்றி, அவர்களை பின்தொடரும் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி

சட்டத்திற்கு புறம்பான பதிவுகளை யாரேனும் பதிவிட்டிருந்தாலோ அல்லது பகிர்ந்திருந்தாலோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸார் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக வலைதளங்களை கையாளுவது குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸாரின் சமூக ஊடகப்பிரிவு, சட்டம் ஒழுங்கினைப் பாதிக்கும் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024-ம் ஆண்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 36 பேர் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு தற்போது வரை 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாத பல இளைஞர்கள், அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குற்றவழக்கு நிலுவையில் உள்ளவர்களை புகழ்ந்து தள்ளும் வீடியோக்களும், பிரிவினையை தூண்டும் பாடல்களுக்கு நடனமாடும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜியும் (பொறுப்பு), மாநகர கமிஷனருமான சந்தோஷ் ஹாதிமணி கூறுகையில், “இளைஞர்கள் சமூக வலைதளங்களை கவனத்துடன் கையாள வேண்டும். பிரிவினையை தூண்டும் வகையிலான வீடியோக்கள் பதிவிடும் போக்கை தடுக்க ஊடக்கப்பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்ச்சை வீடியோக்களை பதிவிடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க