செய்திகள் :

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

post image

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

59 வயதான காந்திராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தனது வீட்டில் இருந்து தினமும் சொந்த காரில் பணிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி, நேற்று இரவு அவர் பணிமுடிந்து நெல்லை நகரம் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்றுள்ளார்.

தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

அப்போது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நின்றதால், அதன் பின்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் நின்றுள்ளது.

ஆனால் பைக்கின் பின்பாக வந்துகொண்டிருந்த சிறப்பு எஸ்.ஐ-யான காந்திராஜனின் கார், பைக் மீது மோதி நின்றது. அதனால் பைக் சாலையின் நடுவில் விழுந்தது.

அதனால் ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த இளைஞர், காரில் வந்த காந்திராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், சாலையின் நடுவில் கிடந்த தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இளைஞர் வந்துள்ளார்.

அதற்குள்ளாக காரை ஸ்டார்ட் செய்த காந்திராஜன் அந்த இடத்தில் இருந்து செல்வதற்கு முயற்சித்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் சாலையின் குறுக்காக வந்துள்ளார்.

அப்போதும் வாகனத்தை நிறுத்தாதக் எஸ்.எஸ்.ஐ காந்திராஜன், அவர் மீது மோதுவது போல வந்திருக்கிறார். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட இளைஞர் காரின் முன்பக்க பேனட் மீது படுத்துள்ளார்.

police patrolling

ஆனாலும் கார நிறுத்தப்படாமல் சென்றதால், அந்த இளைஞர், தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பியுள்ளார். சற்று தூரம் அந்த இளைஞரை இழுத்துச் சென்ற கார் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் பதிவுசெய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பைக்கில் வந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காந்திராஜன் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருப... மேலும் பார்க்க

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்... மேலும் பார்க்க

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயு... மேலும் பார்க்க

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது... மேலும் பார்க்க

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திர... மேலும் பார்க்க

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க