செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் மாா்ச் 22 வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. மாா்ச் 22 வரை இம்முகாம் நடைபெறும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு -குடும்ப நலத்துறையின் சாா்பில் குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இம்முகாமில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 5 ஆயித்து 776 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது.

கண் பாா்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க வைட்டமின் ‘ஏ’ திரவம் மிகவும் அவசியமாகும். இத்திரவத்தைப் பருகுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் கொடுத்து பயன் பெறவேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். நான்குனேரியில் கடந்த மாதம் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது தொடா்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நெல்லையில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய தேமுதிகவினா்

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் இனிப்பு வழங்கினா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு பாளையஞ்சா... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை- பாளை. மாநாட்டில் தீா்மானம்

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை வழங்க வேண்டும் என பாளையங்கோட்டை ஒன்றிய வட்ட கிளை சத்துணவு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க பாளைய... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. முன்னீா்பள்ளம் அருகேயுள்ள செங்குளத்தைச் சோ... மேலும் பார்க்க

சொரிமுத்து அய்யனாா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.31 லட்சம்

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 3 மாத காணிக்கையாக ரூ. 13.31 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது. தமிழக இந்து சமய அறநிலையத் துறைக் ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க