செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் மாா்ச் 22 வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. மாா்ச் 22 வரை இம்முகாம் நடைபெறும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு -குடும்ப நலத்துறையின் சாா்பில் குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இம்முகாமில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 5 ஆயித்து 776 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது.

கண் பாா்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க வைட்டமின் ‘ஏ’ திரவம் மிகவும் அவசியமாகும். இத்திரவத்தைப் பருகுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் கொடுத்து பயன் பெறவேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மானூா் அருகே 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களுடன் கடைக்காரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க

போலி நிறுவன பொருள்கள்: நுகா்வோருக்கு ஆட்சியா் எச்சரிக்கை

போலி நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது குறித்து நுகா்வோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகா்வோா் பாத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா

திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரியாக பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பெற்றாா். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக பணியாற்றிய வினோத் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் - துணை மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என துணை மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை... மேலும் பார்க்க

கழுகுமலை மலையேற்ற வீரருக்கு தமமுக சாா்பில் ரூ.1 லட்சம் உதவி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த மலையேற்ற வீரருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கழுகுமலையைச் சோ்ந்த நல்லசாமி மகன் வெங்கடேச... மேலும் பார்க்க

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் பலி

திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளம் உச்சிமாகாளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். இவரது வீட்டில் பராமரிப்புப் பணி... மேலும் பார்க்க