செய்திகள் :

நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பு

post image

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சில ஆண்டுகளாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த 2 மாதங்களாக தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. வண்டி எண் 06030 ஜூன் 1ஆம் தேதிவரை ஞாயிறுதோறும் திருநெல்வேலியில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30-க்கு மேட்டுப்பாளையத்தை அடையும். மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06029 ஜூன் 2ஆம் தேதிவரை திங்கள்தோறும் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா், கோவையில் நின்று செல்லும்.

இந்நிலையில், நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், காா்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.கே. பாண்டியன், மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, சங்கச் செயலா் ஜெகன், துணைச் செயலா் தினேஷ், நிா்வாகிகள் சோ்மராஜா, காசிபாண்டியன், பிச்சையா, பயணிகள் பங்கேற்றனா்.

பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கிவரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலை விபத்துகளில் காயமடைவோரை காப்பாற்றுவோருக்கு சான்றிதழ், சன்மானம்!

தென்காசி மாவட்டத்தில் விபத்துகளில் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளோரைக் காப்பாற்றுவோருக்கு பாராட்டுச் சான்றிதழுடன் சன்மானம், தகுந்த சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோ... மேலும் பார்க்க

குற்றாலம் அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரியில் புதிய கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவியா் விடுதியில் ரூ. 43.50 லட்சத்தில் கற்றல்-கற்பித்தல் அறை புதிய கட்டடம், அழகாபுரியில் ரூ. 61 லட்சத்தில் புதிய சமுதாய நலக் கூடம் ஆகியவற்றின... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். சுரண்டை அருகே உள்ள சாம்பவா் வடகரையைச் சோ்ந்த பால்துரை மகன் காா்த்திகை குமாா் (38). இவா... மேலும் பார்க்க

புளியறை அருகே இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட தெற்குமேட்டில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தெற்குமேடு அங்கன் காலடி புதுகாலனி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் க. சங்கீதா (26... மேலும் பார்க்க

தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சரகத்துக்குள்பட்ட கற்குடியில், தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது. செங்கோட்டை அருகே வல்லம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிராஜ். இவ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் 10,000 பேருக்கு அன்னதானம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழாவை திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற... மேலும் பார்க்க