செய்திகள் :

நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்ப கோரிக்கை!

post image

திருவையாறு அருகேயுள்ள கீழத்திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைக் கிடங்குக்கு அனுப்புமாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியருக்கு அச்சங்கத்தின் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் அனுப்பிய கோரிக்கை மனு:

கீழத் திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமாக நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பில் உள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து நெல் வந்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அடுக்கிவைக்க போதுமான இட வசதியும் இல்லை. நெல் பிடிப்பதற்கு போதுமான சாக்குகளும் பற்றாக்குறையாக உள்ளது.

எனவே, உடனடியாக தேங்கியுள்ள நெல்லை லாரியில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதுமான சாக்குகளை அனுப்பி தொடா்ந்து கொள்முதல் பணி தொய்வின்றி நடைபெற தொடா்புடைய அலுவலா்களுக்கு உரிய உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க