செய்திகள் :

நேபாளத்தை நெருங்கும் ஆபத்து? பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள சிறிய ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் நீரியல் மற்றும் வானியல் ஆய்வுத் துறை, அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாள நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அந்நாட்டின் கோஷி, நாராயணி, கர்னாலி, மகாகாளி, கமலா, பாக்மதி மற்றும் ரப்தி போன்ற முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயத்துக்கு கீழே இருந்தாலும், உள்ளூர் வெள்ளப்பெருக்கின் அச்சுறுத்தல் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில். டோட்டி, தாதேல்துரா, காஞான்புர், கைலாலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், 9 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 19 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரசுவா மாவட்டத்தில், வெள்ளத்தால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நேபாளத்தின் மீட்புப் படை வீரர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளத்தில் சீனா - நேபாள இடையிலான எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ள நீர் புகுந்ததில் அந்நாட்டின் 4 நீர்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு மின்சார சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The country's Department of Hydrology and Meteorology has issued a flood warning as water levels in various districts of Nepal, including small rivers, have risen.

இதையும் படிக்க: சீனாவுடன் ஊடக ஒத்துழைப்புக்கு கைகோர்க்கும் பாகிஸ்தான்!

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க