செய்திகள் :

பகலில் தினக்கூலி, இரவில் கொலைகாரர்கள்! ஹம்பி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

post image

பெங்களூரு : கர்நாடகத்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ‘ஹம்பி’ இஸ்ரேல் தேசத்து பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பியில் நடந்தது என்ன?

ஹம்பிக்கு மார்ச் 6-ஆம் தேதி சென்றிருந்த இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த 27 வயது பெண் உள்ளிட்ட சுற்றுலா குழுவினர், 3 ஆண்கள்(அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், மகாராஷ்டிரம், ஒடிஸாவை சேர்ந்த ஒருவர்), 2 பெண்கள்(ஒரு இஸ்ரேலியப் பெண்மணி மற்றும் ஹம்பியிலுள்ள விடுதி மேலாளர்) உள்பட மொத்தம் 5 பேர், கடந்த வியாழக்கிழமை இரவு உணவருந்தியபின் தாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு ஹம்பியில் உள்ள சநாபூர் ஏரியை பார்வையிடச் சென்றிருந்தனர்.

அப்போது, அங்கே இரவு 11 மணியளவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, துங்கபத்ரா கால்வாயோரம் இருந்த சுற்றுலா பயணிகளை வழிமறித்து தாக்கியுள்ளது.

அவர்கள் மூவரும் சேர்ந்து, ஒடிஸாவை சேர்ந்த பிபாஷை சரமாரியாக அடித்து துன்புறுத்தியதுடன் அவரை துங்கபத்ரா கால்வாயில் வீசிச் சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன்பின் அவர்கள், அங்கிருந்த இஸ்ரேலியப் பெண்மணியையும் அவருடன் துணையாக வந்திருந்த விடுதி மேலாளர் பெண்மணியையும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த நிலையில், அவர்களால் கால்வாயில் தள்ளிவிடப்பட்டாலும் நீந்தி கரை சேர்ந்த அமெரிக்காவை சேர்ந்த டேனியலும், மகாராஷ்டிரத்தை சேர்ந்த பங்கஜும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக் கொண்டனர்.

இந்த குற்றச் செயலில் தொடர்புடைய இருவர் மார்ச் 8 கைது செய்யப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். தினக்கூலி ஊழியர்களான கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபரான ஷரனா பசவாவை சென்னையில் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கண்ட மூவரும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பதாக கர்நாடக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பகலில் தினசரி சம்பளம் பெற்று பிழைப்பு நடத்தும் தொழிலாளிகளாக பொதுவெளியில் தங்களைக் அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்கள், இரவில் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் அதிலும் குறிப்பாக, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மேற்கண்ட மூவரும் அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்ததுடன், அங்கு சுற்றுலா பயணிகளுடன் வந்திருந்த விடுதி உரிமையாளர் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரையும், இஸ்ரேல் நாட்டுப் பெண்ணையும் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.ஞாயிற்றக... மேலும் பார்க்க

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க