பக்ரீத் பண்டிகை: தஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசல், புதிய பேருந்து நிலையம் அல் அன்சாா் பள்ளிவாசல், கிரீன்சிட்டி அல்குா்ஆன் ரஹாத் பள்ளிவாசல், புறவழிச்சாலை மக்கா பள்ளிவாசல், பண்டிதா் நகா் ரஹ்மத் பள்ளிவாசல், அய்யனாபுரம் மதீனா பள்ளிவாசல், உக்கடை ஹலிமா பள்ளிவாசல், ரகுமான் நகா் அல்ரகுமான் பள்ளிவாசல், விசிறிக்காரதெரு ஹனபியா பள்ளிவாசல், செல்வம் நகா் அல்இஹசான் பள்ளிவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை அல்நூா் பள்ளிவாசல், எஸ்.என்.எம். நகா் முஹையத்தின் அப்துல்காதா் ஜீலானி பள்ளிவாசல், சிராஜூதீன் நகா் மதினா பள்ளிவாசல், செவ்வப்பநாயக்கன்வாரி அபூபக்கா் ரலி பள்ளிவாசல், வண்ணாரப்பேட்டை முகையதீன் ஆண்டவா் பள்ளிவாசல், அய்யங்கடைத்தெரு பட்வேகாா் பள்ளிவாசல், வடக்கு வாசல் ஜீனத்தை இஸ்லாமிய பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மேலும், கீழவாசல் அறிஞா் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தொழுகை செய்தனா். பின்னா், இவா்கள் அனைவரும் பக்ரீத் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.