செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

post image

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள்தெரிவித்தனா்.

முன்னதாக, கரூா், அரவக்குறிச்சி, திருப்பூா், காங்கேயம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா். இவற்றை வாங்குவதற்கான ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்களும், இறைச்சி கடைக்காரா்களும், வியாபாரிகளும் சந்தைகளில் குவிந்தனா். அவா்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனா்.

இதில், 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை விற்பனை ஆனது.மொத்தத்தில் ரூ. 50 லட்சத்சுத்தும் மேல் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க