முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள்தெரிவித்தனா்.
முன்னதாக, கரூா், அரவக்குறிச்சி, திருப்பூா், காங்கேயம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா். இவற்றை வாங்குவதற்கான ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்களும், இறைச்சி கடைக்காரா்களும், வியாபாரிகளும் சந்தைகளில் குவிந்தனா். அவா்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனா்.
இதில், 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை விற்பனை ஆனது.மொத்தத்தில் ரூ. 50 லட்சத்சுத்தும் மேல் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.