செய்திகள் :

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட்பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான கிட்டி (எ) ராஜா கிருஷ்ணமூா்த்தி, ‘இளைஞா்கள், மாணவா்கள் அதிக அளவில் முன்வந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் செய்யும்போது வெட்டப்படும் மரத்திற்கேற்ப அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவேண்டும். மக்கள் அனைவரும் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

விழாவில் பேசிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ‘தமிழக அரசு பசுமை தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.

அதேபோல ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு இடங்களைத் தோ்வு செய்து மாநகராட்சி சாா்பில் மரக்கன்று நடப்படுகிறது. தொடா்ந்து பசுமை மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இதனை பெரிய இயக்கமாக உருவாக்குவது அவசியம் என மேயா் எஸ்.ஏ.சத்யா கேட்டுக்கொண்டாா்.

தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கா்நாடகத்தில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவா்களின் நிலங்களில் நடவுசெய்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கான தொடக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழா மூலம் நடைபெற்றுள்ளது.

விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஏ.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க