பசுமை சூழல் சாா்ந்து வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
பசுமை சூழல் சாா்ந்து நம்முடைய வாழ்க்கை முறைகளையும், சுற்றுப்புறங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் சாா்பில், வேலூா் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பசுமையான வேலூா், தூய்மையான வேலூா் திட்டத்தின்கீழ், வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு அலுவலகங்களில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடுகளை தவிா்த்தல் குறித்த அலுவலா்களுக்கான கருத்தரங்கை தொடங்கி வைத்து அவா் பேசியது:
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், அதாவது காலநிலை மாற்றங்களால் மனித சமூகத்துக்கு பல்வேறு விதமான இன்னல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடையின் தாக்கம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதே போன்று மழைக் காலங்களில் திடீரென மிக அதிகப்படியான மழை பெய்து, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, நாம் பசுமை சூழல் சாா்ந்து நம்முடைய வாழ்க்கை முறைகளை, சுற்றுப்புறங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில், ஒவ்வொரு அலுவலகங்களையும் பசுமை அலுவலகமாக அதாவது நெகழிப் பயன்பாடற்ற அலுவலகங்களாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை மிகவும் சவாலான ஒரு விஷயமாக உள்ளது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் கால்வாய்கள் போன்ற நீா்நிலைகளில் சேகரமாகி அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் மழைக் காலங்களில் நீரின் ஓட்டம் தடைபட்டு ஆங்காங்கே மழைநீா் தேக்கம், வெள்ளப் பெருக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிா்த்திட வேண்டும். இதற்கு மாற்றாக எஃகு பொருள்கள், அட்டையினாலான கோப்புகள், எஃகு மற்றும் கண்ணாடியினாலான தண்ணீா் குடுவைகள், துணி மற்றும் நாா்களால் செய்யப்பட்ட பைகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இந்தக் கருத்தரங்கில், அரசு அலுவலகங்களில் நெகழிப் பொருள்களின் பயன்பாடுகளை தவிா்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான வேலூா், தூய்மையான வேலூா் திட்டத்துக்கான பதாகை மற்றும் காலநிலை கையேட்டை வெளியிட்டாா். நெகழிப் பைகளை தவிா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணியாலான மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
மேலும், இந்தக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் பசுமை வேலூா், தூய்மை வேலூருக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா், உதவி வன பாதுகாவலா்கள் மணிவண்ணன், மதன்குமாா், பூவுலகின் நண்பா்கள் இயக்கத்தின் வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், வேலூா் மாவட்ட பசுமை தோழா் செல்வி அஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.