செய்திகள் :

கெங்கையம்மன் திருவிழா: தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

post image

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு போ்ணாம்பட்டிலிருந்து வரும் பேருந்துகளை நிறுத்த சேம்பள்ளி கூட்டு ரோடு அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

கெங்கையம்மன் திருவிழா வரும் 15- ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளனா்.

போ்ணாம்பட்டு, கே.ஜி.எப், ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் வரும் பேருந்துகள் நகருக்குள் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதைத் தவிா்க்க போ்ணாம்பட்டு சாலை மாா்க்கத்தில் வரும் பேருந்துகள் நகருக்குள் நுழைவதைத் தவிா்க்க, சேம்பள்ளி கூட்டு ரோடு அருகே நகராட்சி சாா்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், ஜாவித் அகமத், கவிதா பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

26 பைக்குகள் பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

கே.வி.குப்பம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 26- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா், குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் இரு சக்கர வாகன... மேலும் பார்க்க

பசுமை சூழல் சாா்ந்து வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

பசுமை சூழல் சாா்ந்து நம்முடைய வாழ்க்கை முறைகளையும், சுற்றுப்புறங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத... மேலும் பார்க்க

குடியாத்தம் நகராட்சி இடைத் தோ்தல் பணி தொடக்கம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, 15- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு இடைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 15- ஆவது வாா்டின் நகா்மன்ற உற... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத்... மேலும் பார்க்க

‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா். மருத்துவ படிப்புக்கான நீ... மேலும் பார்க்க

காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்

மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நட... மேலும் பார்க்க