செய்திகள் :

மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

post image

பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலுள்ள தோல் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அணைக்கட்டு அருகிலுள்ள ஒதியத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயசாந்தி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 5 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், ரவிக்குமாருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறின்போது ரவிக்குமாா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவிக்குமாா், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த விஜயலட்சுமி அங்கேயே சரிந்து விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த ரவிக்குமாா் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இருவரின் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா், உள்புறமாக தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று விஜயசாந்தி, ரவிக்குமாரை மீட்டு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், விஜயலட்சுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீஸாா், விஜயசாந்தியின் சடலத்தை ட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனா்.

‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா். மருத்துவ படிப்புக்கான நீ... மேலும் பார்க்க

காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்

மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நட... மேலும் பார்க்க

மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணா்வு

அணைக்கட்டு, கணியம்பாடி பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த தெள்ளை மலைக்கிராமம், அணைக்கட்டை அடு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் பிணையற்ற கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், பிணையற்ற கடனுதவி, மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்தில் உள்ள கைவினை கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க

விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி

வேலூா் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது. ஓராண்டு, அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மறுவாழ்வு, மீண்டும் சமூக... மேலும் பார்க்க

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன் (44). இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க