செய்திகள் :

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை அணிக்கான எச்சரிக்கை: ரிக்கல்டான்

post image

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: 8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தவறவிட்டது. மும்பை அணி 14 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ரியான் ரிக்கல்டான் கூறுவதென்ன?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கான எச்சரிக்கை எனவும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி எங்களைவிட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இந்த போட்டியில் தோற்றுவிட்டதால், எல்லாம் முடிந்துவிட்டது என்றாகாது. உண்மையைக் கூறவேண்டுமென்றால், மும்பை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் திறமை எங்களுக்கு இருக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் வலுவாக மீண்டு வருவோம்.

இதையும் படிக்க: சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராகும் ரெய்னா!

நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. 200 அல்லது 220 ரன்கள் எடுத்திருந்தால், எதிரணிக்கு சவால் அளிக்கும் விதமாக எங்களது பந்துவீச்சாளர்கள் செயல்பட்டிருப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து அதிக முறை வெற்றி பெற்றதாகவே வரலாறு கூறுகிறது. முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகளை இழந்ததால், எங்களால் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடியவில்லை என்றார்.

வருகிற மே 30 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க

சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!

இளம் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் எம்.எஸ்.தோனி குறித்து நெகிழ்ச்சியானப் பதிவினை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்தாலும... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க