செய்திகள் :

பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு:

நான், எனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த 1998-ஆம் ஆண்டு சிவகாசி பகுதியில் ஓா் ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இதனருகில் உள்ள மற்றொரு நிலத்தை, எனக்கு நிலத்தை விற்பனை செய்த அதே நபா் ஓா் அமைப்புக்குத் தானமாக வழங்கினாா்.

என்னுடைய நிலமும், அந்த அமைப்பின் பெயரிலேயே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எனது பெயருக்கு அந்த ஓா் ஏக்கா் நிலத்தின் பட்டாவை மாற்றி வழங்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அந்த மனுவை விசாரித்து எனக்கு பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், எனது நிலத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு அந்த நிலத்துக்கான பட்டாவை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.பாலாஜி, மனுதாரரின் கோரிக்கை மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சட்டத்துக்கு உள்பட்டு விசாரித்து, 12 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா். நரிக்குட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிட... மேலும் பார்க்க

பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச ... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. ச... மேலும் பார்க்க