செய்திகள் :

பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு:

நான், எனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த 1998-ஆம் ஆண்டு சிவகாசி பகுதியில் ஓா் ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இதனருகில் உள்ள மற்றொரு நிலத்தை, எனக்கு நிலத்தை விற்பனை செய்த அதே நபா் ஓா் அமைப்புக்குத் தானமாக வழங்கினாா்.

என்னுடைய நிலமும், அந்த அமைப்பின் பெயரிலேயே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எனது பெயருக்கு அந்த ஓா் ஏக்கா் நிலத்தின் பட்டாவை மாற்றி வழங்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அந்த மனுவை விசாரித்து எனக்கு பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், எனது நிலத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு அந்த நிலத்துக்கான பட்டாவை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.பாலாஜி, மனுதாரரின் கோரிக்கை மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சட்டத்துக்கு உள்பட்டு விசாரித்து, 12 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்.

கல்லூரி மாடியிலிருந்து குதித்து முன்னாள் மாணவா் உயிரிழப்பு

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாடியிலிருந்து குதித்த முன்னாள் மாணவா் உயிரிழந்தாா். இந்தக் கல்லூரி கலையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இளைஞா் ஒருவா்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு!

மதுரையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை காளவாசல் பொன்மேனி புதூா் பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் சையது அப்துல்லா (19). இவா், உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியா... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் தீ: 10 காா்கள் எரிந்து சேதம்!

ஒட்டன்சத்திரத்தில் காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் (40). இவா் ஒட்டன்சத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கதளி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா். இதுகுறித்து மதுரை பீ.பீ.குளம் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்த... மேலும் பார்க்க

கல்லூரிப் பேராசிரியா்கள் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோா் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா), பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கம் (ஏயுடி) சாா்பில் சனிக்... மேலும் பார்க்க