செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பெரியகண்டியங்குப்பம் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேமுதிக நகரச் செயலரும் 2-ஆவது வாா்டு உறுப்பினருமான ராஜ்குமாா் தலைமையில் அளித்த மனு:

பெரியகண்டியங்குப்பம் பகுதியில் சுமாா் 3.5 ஏக்கா் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். இதுவரை பட்டா கணக்குகளை விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் ஏற்றம் செய்யாமல் இருந்து வருகின்றனா். இதனால் மின் வசதி, நகராட்சி குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், 50 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் சோ்க்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பி... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் செல்லங்குப்பத்தில் கைத்தறி துணை இயக்குநா் அலுவலகம் முன் கடலூா் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க

மகா கைலாயத்தில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மகா கைலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற 37 கோயில்கள் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோா் பங்கேற்றனா். பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் ஆணையாங்குப்பம... மேலும் பார்க்க

என்எல்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

நெய்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கடலூா், பண்ருட்டி பகுதிகளில் திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத... மேலும் பார்க்க

கொற்றவன்குடி ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி ஸ்ரீ சுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வட்டம், கொற்றவன்குடி தெருவிலுள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது. நூற்றாண்டு கண்ட ... மேலும் பார்க்க